அரியாங்குப்பம் : பைக்கினை சேதப்படுத்திய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியாங்குப்பம் திப்பு சாய்பாபா தெருவை சேர்ந்தவர் இருதயராஜ், 50; இவர் புதுச்சேரி பிரெஞ்சு குடியுரிமை நீதி மைய கட்சிக்காக பைக்கில் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் தேர்தல் பிரசாரம் செய்தார்.அப்போது வீராம்பட்டிணம் சாலை வழியாக பிரசாரம் செய்த போது அரியாங்குப்பத்தை சேர்ந்த சேகர் உட்பட கும்பல் இருதயராஜிடம் தனியாக பிரசாரம் செய்கிறாய் என கேட்டு பைக்கை சேதப்படுத்திதாக்கினர்.இருதயராஜ் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சேகரை கைதுசெய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE