புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இறுதி நாள் பிரசாரமாக, திலாஸ்பேட்டையில் விடுபட்ட பகுதிகளில் நேற்று கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்., வேட்பாளர் ஆறுமுகம் வீடு, வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட முதன்மைத் தொகுதியாக இந்திரா நகர் தொகுதியை மாற்றுவேன். இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவேன். முதியோர் உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு சென்டாக் கட்டணங்கள் முழுமையாக அரசே கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்வேன்.
மேலும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கூடுதல் இடங்கள் மற்றும் மற்றும் சிறப்பு மருத்துவ படிப்புகள் கொண்டு வருவேன்.மத்தியில் கூட்டணி கட்சியான பா.ஜ., உள்ளதால் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து நிதிகளும் தடையின்றி கிடைப்பது உறுதியாகி விட்டது. இந்திரா நகர் தொகுதி அனைத்து வளர்ச்சிகளும் பெற்ற முதல் தொகுதியாக மாறும் என்பது நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE