திருவள்ளூர் : திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், நாளை நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான ஓட்டு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள், தயார் நிலையில் உள்ளன.
திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், 398 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இத்தொகுதிக்கு தேவையான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தனியார் பள்ளியில், இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.ஓட்டு இயந்திரம் உள்ள அறைக்கு, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மேலும், கொரோனா தொற்று நடவடிக்கையாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், சானிடைசர், வெப்பநிலையை கண்டறியும் வெப்பமானி, கிளவுஸ் ஆகியவையும், தனித்தனியாக கட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இவை அனைத்தும், இன்று மாலைக்குள், அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE