புதுச்சேரி : உருளையன்பேட்டை சுயேட்சை வேட்பாளர் நேரு என்ற குப்புசாமி தொகுதியில் பல இடங்களுக்கு சென்று பானை சின்னத்துக்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:கென்னடி நகர், சுப்ராயப் பிள்ளை சத்திரம், பூங்குளம், கரிமேடு, சாந்தி நகர், சாந்தி நகர் விரிவாக்கம், சாரதி நகர், இளங்கோ நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்திகரித்த புதிய குடிநீர் மையத்தை நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது அமைத்து தந்தேன். தேவையான இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தேன்.சாந்தி நகர் - கென்னடி நகர் பகுதியில் இடத்தை கையகப்படுத்தி, புதுவை நகராட்சியிடம் ஒப்படைத்து இணைப்புச் சாலையை அமைத்துக் கொடுத்தேன். இப்பகுதியில் புதைவட கேபிள் அமைக்கப் பட்டு சீரான மின் வினியோகம் கிடைக்க வழிவகை செய்தேன்.உப்பனாரில் மழை நீர் பெருக்கெடுக்கும்போது கென்னடி நகர், பூங்குளம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
இதை தடுப்பதற்கு உப்பனாரை ஒட்டி புதிய கான்கிரிட் சுவர் கட்ட நடவடிக்கை எடுத்தேன். இந்த பகுதிகளில் அங்கன்வாடி மையங்களை கட்டி தந்தேன்.நான் எம்.எல்.ஏ.,வாக மீண்டும் வெற்றி பெற்றவுடன் மக்கள் நல்வாழ்விற்கான நல்ல திட்டங்களை செயல்படுத்துவேன்; பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பேன்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE