சென்னை: ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., தமிழகத்திற்கு வந்திருக்கிறது என்ற பா.ஜ., எம்.பி.,யின் கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பா.ஜ., எம்.பி.,யான தேஜஸ்வி சூர்யா. ‛ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., தமிழகத்திற்கு வந்திருக்கிறது' என பேசியிருந்தார். இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழகத்தில் ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., இங்கு வந்திருக்கிறது என்று பா.ஜ., எம்.பி., ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 'சனாதன தர்மம்' என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் ஈ.வெ.ரா. தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் ஈ.வெ.ரா.

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் ஈ.வெ.ரா., காமராஜ் மற்றும் அண்ணாதுரை. தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக பா.ஜ., தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? ஈ.வெ.ராவுக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர்செல்வம் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?. இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE