வால்பாறை:வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள, மூன்று ஓட்டுச்சாவடிகளில் வனத்துறை பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்தலையொட்டி, வால்பாறை தொகுதியில் மொத்தம், 89 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வால்பாறை மலைப்பகுதியில் சின்னக்கல்லார், மானாம்பள்ளி, சக்தி எஸ்டேட் ஆகிய மூன்று ஓட்டுச்சாவடிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.இது குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் கேட்ட போது, வால்பாறையில் பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அந்தப்பகுதிகளுக்கு போதிய பாதுகாப்புடன் ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுகிறது.அதேபோன்று, வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த ஓட்டுச்சாடிகளில், வனத்துறை பாதுகாப்புடன், ஓட்டுப்பதிவு நடைபெறும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE