ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் பருத்தி விளைச்சல் இன்றி சந்தைக்கு வரத்து குறைந்துஉள்ளதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற பருத்தி பஞ்சு ஒரு கிலோ ரூ.50 ஆக விலை உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர்பரப்பளவில் பருத்தி சாகுபடி நடக்கிறது. குறிப்பாக சத்திரக்குடி, பரமக்குடி, உத்திரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். கடந்தாண்டு மழை காரணமாக ஊரணிகளில் சீசனில் பருத்தி நன்றாக விளைந்தது. இதனால் விலை வீழ்ச்சியடைந்து பஞ்சு ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை தரத்திற்கு ஏற்ப விலைபோனது.
இந்நிலையில் நெல்சாகுபடி முடிந்து தற்போது பருத்தி சாகுபடி தொடங்கியுள்ளனர். இதனால் ராமநாதபுரம் சந்தையில் பருத்தி பஞ்சு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விலைபோகிறது. தற்போது சீசன் இல்லாத காரணத்தினால் மேலும் உயர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE