சென்னை : சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கும் வகையில், சென்னையில் இருந்து, 5.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது.
அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தொழில் நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும், ஏப்ரல், 1 முதல், 5ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.ஐந்து நாட்களும் வழக்கமான பஸ்களுடன் சேர்த்து, 14 ஆயிரத்து, 215 பஸ்கள் தேர்தலுக்காக இயக்கப்பட்டன. அவற்றில், நேற்று வரை, 5.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE