கோவை:பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போலீசார் மூன்று இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், ஆயுதப்படை போலீசார், பிற மாநில போலீசார், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலரும், தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இச்சூழலில், மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்குப்பதிவு செய்ய, தேவையான முழு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை, உணர்த்தும் வகையில், நேற்று மாநகரில் மூன்று இடங்களில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை, மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் துவக்கி வைத்தார்.கொடி அணிவகுப்பில் ஒரு கம்பெனி மத்திய ஆயுதப்படை, ஊர்காவல் படையினர், 100 பேர், பயிற்சி போலீசார், 100, சிறப்பு காவல்படையினர், 50 பேர், மாநகர போலீசார் மற்றும் போலீஸ் வாத்தியக்குழுவினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE