சென்னை : 'நீதிமன்ற கட்டண உயர்வை, அரசு மறுபரிசீலனை செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, வசந்த் என்பவர் தாக்கல் செய்த மனு:உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை, 2017ல் அரசு உயர்த்தி விட்டது. 'ரிட்' வழக்குக்கான கட்டணம், 200ல் இருந்து, 1,000 ரூபாய்; மேல்முறையீட்டுக்கான கட்டணம், 200ல் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.உத்தரவுபல மாநிலங்களில், நீதிமன்ற கட்டணம் குறைவாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய, அதிகபட்ச கட்டணம், 500 ரூபாய் தான். எனவே, பழைய கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.எம்.ரமேஷ் ஆஜராகி, ''பல மடங்கு கட்டண உயர்வால், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர். பல மாநிலங்களில், நீதிமன்ற கட்டணம் குறைவாகவே உள்ளது,'' என்றார்.அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:அரசின் கொள்கை முடிவு, தன்னிச்சையான நடவடிக்கையாக இருந்தால் ஒழிய, நீதிமன்றம் அதில் குறுக்கிடாது. எனவே, முடிவான கருத்தாக, இந்த கட்டத்தில் எதையும் நாங்கள் தெரிவிக்கவில்லை.
தள்ளிவைப்புநீதிமன்ற கட்டணம், 200ல் இருந்து, 1,000, 2,000 ரூபாய் என, உயர்த்தி இருப்பதை, மாநில அரசு மறுபரிசீலனை செய்யலாம். விசாரணை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அரசு தரப்பு கருத்தை பெற வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, வரும், 28ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE