கோவை:கோவையில் கொரோனா தொற்று, வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், புதிதாக 376 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.ஒரு இடத்தில், மூன்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட வீதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மற்றவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.இனிவரும் காலங்களில், ஒரு வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த வீட்டை மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE