கோவை:சட்டசபை தேர்தலுக்கு வாக்கு அளிக்க செல்வோர் வசதிக்காக, கோவை கோட்டத்தில், 1,370 சிறப்பு பஸ்கள், நாளை வரை இயக்கப்படுகின்றன.சட்டசபை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் கடந்த, 3ம் தேதி முதலே சொந்த ஊர் சென்று வாக்கு அளிக்கும் மக்கள் கூட்டம், பஸ் ஸ்டாண்ட்களில் அதிகரித்துள்ளது. இதற்கென, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மண்டலங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் இருந்து, 1370 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கூட்டத்தை பொறுத்து, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE