திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றும் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுச் சாவடி அலுவலர் எண் 1, 2 மற்றும் 3 ஆகிய பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு நேற்று பணியாணை வழங்கப்பட்டது.தெற்கு தொகுதியில் உள்ள 401 ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, குலுக்கல் முறையில் சாவடிகள் ஒதுக்கீடு செய்து நேற்று இதற்கான உத்தரவு கடிதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜெய்வாபாய் பள்ளியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் இதை வழங்கினர்.இதைப் பெற்றுக் கொண்ட அலுவலர்கள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச் சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர். ஓட்டுப்பதிவுக்கான பொருட்களை முறையாக சரி பார்த்துப் பெற்றுக் கொண்டு, ஓட்டுச் சாவடியை தயார்படுத்த வேண்டும்; காலை 5:30 மணிக்கு வேட்பாளர்கள் ஏஜன்ட் முன்னிலையில், மாதிரி ஓட்டுப் பதிவு நடத்த வேண்டும்.காலை சரியாக 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கும் வகையில் உரிய ஏற்பாடுசெய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.தெற்கு தொகுதியில் உள்ள 401 ஓட்டுச் சாவடிகளில் மொத்தம் பணியாற்றவுள்ள 1,604 தேர்தல் அலுவலர் மற்றும் ரிசர்வ் அடிப்படையில் 20 சதவீதம் என 320 பேருக்கு பணி உத்தரவு கடிதம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE