திருப்பூர்:'வெளி மாநில நுாற்பாலைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்,' என, தொழில் பாதுகாப்பு அறிவித்துள்ளது.திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கை:நுால் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், சிரமப்பட்டு வருகின்றன. ஆர்டர்கள் கைநழுவி, போட்டி நாடுகளுக்கு செல்கின்றன. ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, பெரும் லாபம் இழப்பு மற்றும் வர்த்தக இழப்பு ஏற்பட்டு வருகிறது.ஆந்திரா, தெலுங்கானா மாநில நுாற்பாலைகள், திருப்பூரில் தங்கள் வர்த்தக மையங்களை அமைக்க, ஆர்வமாக உள்ளன. திருப்பூரில் அமையும் வடமாநில நுாற்பாலைகளை, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தவேண்டும்.இதன் மூலம், ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, ஆண்டு முழுதும், தட்டுப்பாடு இன்றியும், சீரான விலைக்கு, தரமான நுால் கிடைக்கும். எதிர்காலங்களில், இதுபோன்று, அபரிமிதமான நுால் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுத்து, பின்னலாடை துறையை பாதுகாக்க முடியும். திருப்பூரில், வெளி மாநில நுாற்பாலைகள் அமைய, தேவையான உதவிகளை செய்ய, தொழில் பாதுகாப்புக்குழு தயாராக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE