சிவகாசி : சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், தொழிலாளி பலியானார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாரனேரி காக்கிவாடன்பட்டியில், ராஜு என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணசாமி பயர் ஒர்க்ஸ் ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 50க்கும் மேற்பட்ட அறைகளில், 120க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றினர்.நேற்று காலை, ஒரு அறையில் மருந்து கலவை எடுத்தபோது, திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. மூன்று அறைகள் தரைமட்டமான. தர்மலிங்கம், 45, என்ற தொழிலாளி உடல் சிதறி இறந்தார்.
மேலும், 45 - 52 வயதுடைய இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பட்டாசு ஆலை மேலாளர் கோமதிராஜ், போர்மேன் முத்துராஜை கைது செய்த மாரனேரி போலீசார், உரிமையாளர் ராஜுவை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE