காங்கேயம் : காங்கேயம் டி.எஸ்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் போலீஸ் டி.எஸ்.பி., தனராசு. இவருக்கு, லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.இதில், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். டி.எஸ்.பி., அலுவலக பகுதியில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 'அவருடன் பணிபுரிந்த போலீசாருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்' என, சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE