கோவை:தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததால், கோவை மாஜி மேயர் ராஜ்குமார் வீட்டில் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.கோவை, கணபதியை சேர்ந்தவர் முன்னாள் மேயர் ராஜ்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன், அ.தி.மு.க.,வில் இருந்துதி.மு.க.,வில் இணைந்தார். நேற்று கணபதியில் உள்ள அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும், தி.மு.க., பகுதி பொறுப்பாளர்களுக்கு அவரது வீட்டிலிருந்து பணம் வழங்கப்படுவதாகவும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று மாலை அவரது வீட்டுக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை சிறப்புக்குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த வடக்கு தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய்குமார் சிங் ஆய்வில் ஈடுபட்டார்.அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். மாலை 5:00 மணி முதல் இரவு, 8:30 வரை சோதனை நடந்தது. சோதனையில் பணம், ஆவணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.திடீர் ரெய்டு குறித்து ராஜ்குமார் கூறுகையில்,''தி.மு.க., வுக்கு தற்போது சாதகமான சூழ்நிலை உள்ளது. எங்களை முடக்க அ.தி.மு.க., பொய் புகார்களை கூறி, சோதனை நடத்த செய்கின்றனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE