பாலக்காடு:பாலக்காடு மாவட்டம், ஆலத்துார் பாடூரை சேர்ந்தவர் ராஜேஷ் 32; யானை பாகன். காலில் ஏற்பட்ட காயத்தால், சில நாட்களாக யானை ஓய்வில் இருக்கிறது. நேற்று மாலை 5.30 மணியளவில், யானைக்கு உணவளிக்க ராஜேஷ் அருகில் சென்றார். அப்போது ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை, அவரை கீழே தள்ளி காலால் மிதித்தது.தலையும், உடலும் துண்டிக்கப்பட்ட நிலையில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீ கிருஷ்ணாபுரம் போலீசார் உடலை மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்பகுதியில் இருந்தவர்களிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE