காரைக்கால்; காரைக்கால் மாவட்டத்தில் ஓட்டுச் சாவடிகளுக்கு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, திருநள்ளார், நெடுங்காடு, நிரவி திருப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளில் 234 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று துவங்கியது.கலெக்டர் அர்ஜூன்சர்மா, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆதர்ஷ், சுபாஷ் முன்னிலை வகித்தனர். அரசு கலை கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூம் சீல் திறந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒவ்வொரு தொகுதியாக பிரித்து அனுப்பும் பணி நடந்தது.மேலும் 234 ஓட்டுச் சாவடிகளில் 33 பதட்டமான ஓட்டுச் சாவடிகள் உள்ளதால் மைக்ரோ அப்சர்வர் மற்றும் வெப் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE