திருக்கனுார்; செல்லிப்பட்டில் தனிமை யின் காரணமாக மூதாட்டி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் குப்பு, 72; பெரிய மார்க்கெட்டில் கீரை விற்று வந்தார். இவரது கணவர் இறந்து விட்டதாலும், இரண்டு மகள்களுக்கு திருமணமாகி வெளியூர் சென்றதால் தனிமையில் வசித்தார். இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று முன் தினம் வீட்டின் உள்ளே துாக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.திருக்கனுார் போலீசார் அவரது உடலை மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE