புதுச்சேரி; ஓட்டுச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பை சீனியர் எஸ்.பி., பிரதிக் ஷா கோத்ரா நேற்று ஆய்வு செய்தார்.புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுப்பதிவு மிஷின்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது.ஓட்டுச்சாவடிகளில் வெளியாட்கள் யாரும் நுழையாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பிற்கு பணியமர்த்தப்பட்ட போலீசார் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனரா என சீனியர் எஸ்.பி. பிரதிக் ஷா கோத்ரா நேற்று ஆய்வு செய்தார். கருவடிக்குப்பம், உப்பளம், காமராஜ் நகர் தொகுதி உள்ளிட்ட பல தொகுதியில் ஓட்டுச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE