திருக்கனுார்; செல்லிப்பட்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த இருவர் பறக்கும் படையினரிடம் சிக்கினர்.புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி வாக்கா ளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வழங்கலை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், செல்லிப்பட்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், பறக்கும் படை அதிகாரி ராமசாமி தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, தனபால் என்பதும், சுயேச்சை வேட்பாளருக்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தெரியவந்தது.இதையடுத்து, அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பூத் சிலிப் ஆகியவற்றவை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் திருக்கனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE