புதுச்சேரி; உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க.,- சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கோபால், சுயேட்சை வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., நேரு போட்டியிடுகின்றனர். இவ்விரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் நேற்றிரவு பாரதிபுரம் பகுதியில் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கைகலப்பிலும் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான பெரியக்கடை போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.பின்னர் அப்பகுதியில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE