வானுார்; வானுார் சட்டசபை தொகுதியில் பதற்ற ஓட்டுச்சாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வானுார் சட்டசபை தனி தொகுதியில் மொத்தம் 163 மையங்களில், 327 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் சங்கரலிங்கம், சரவணன் ஆகியோர் உடன்இருந்தனர்.இந்திய தேர்தல் ஆணையத்தால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்திற்கும் வழங்கியுள்ள வாக்காளர்களுக்கான கையுறைகள், அலுவலர்களுக்கான முகக்கவசங்கள், சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.மேலும், இடையன்சாவடி, குயிலாப்பாளையம், நல்லாவூர், சொர்ணாவூர், பேராவூர் உள்ளிட்ட பகுதிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது.இப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.வானுார் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களுக்கு துணை ராணுவம் உட்பட 449 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி., அஜய்தங்கம் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE