கடலுார்; கடலுாரில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாடகை வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் தொகுதியில் 343 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில் ஓட்டுப் பதிவிற்கான இயந்திரங்கள் கொண்டு செல்லவும், தேர்தலுக்கான பிற பயன்பாட்டிற்காகவும் கார், வேன், டெம்போ என 78 வாகனங்கள் வாடகைக்கு பயன்படுத்தப்படுகிறது.தேர்தல் பணியில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் 50க்கும் மேற்பட்டோர் கடலுார் தாலுகா அலுவலகத்தை நேற்று மதியம் 1:00 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ஓட்டுப் பதிவிற்கான இயந்திரங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்.,கருவி பொருத்த கடந்த 27ம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன. அன்றைய தினத்திற்கான படி வழங்கவில்லை.நாளை (இன்று) ஓட்டுப் பதிவிற்கான இயந்திரங்களைக் கொண்டு செல்ல படி, உணவு வழங்கவில்லை என தெரிவித்தனர்.தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெகதீஸ்வரன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையேற்று ஓட்டுனர்கள் போராட்டத்தை கைவிட்டு 1:15 மணிக்கு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE