கடலுார்; கடலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 72 பேருக்கு உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த தொற்று, கடந்த 1ம் தேதி முதல் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. 1ம் தேதி 39 பேருக்கும், 2ம் தேதி 56 பேர், 3ம் தேதி 75 பேருக்கும், நேற்று முன்தினம் 79 பேருக்கு என உயர்ந்து வருகிறது.நேற்று 72 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்து 30 ஆக உயர்ந்தது. நேற்று 50 பேர் குணமடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE