மயிலாப்பூர்-மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க, இணை கமிஷனர் தலைமையில், போலீசார் நேற்று, கொடி அணிவகுப்பு நடத்தினர்.சென்னை மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க, தமிழக போலீசாருடன் இணைந்து, தேர்தல் பாதுகாப்பிற்காக தமிழகம் வந்துள்ள ராஜஸ்தான் ஆயுதபடை போலீசார், நேற்று காலை கொடி அணிவகுப்பு நடத்தினர்.நொச்சிநகர், நொச்சி குப்பம், காமராஜர் சாலை, அம்பேத்கர் பாலம், மீனாம்பாள்புரம் போன்ற பகுதிகளில் நடந்த அணிவகுப்பு, சிட்டி சென்டர் அருகே நிறைவு பெற்றது.கிழக்கு மண்டல இணை கமிஷனர், பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில், மயிலாப்பூர் பொறுப்பு துணை கமிஷனர் சாம்சன், உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் தமிழக போலீசார், 25 பேர் மற்றும் ராஜஸ்தான் ஆயுதபடை போலீசார், 75 பேர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE