வியாசர்பாடி - வியாசர்பாடியில், மாவா விற்ற, 3 பெண்கள் உட்பட நால்வரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, வியாசர்பாடி, சாமந்திப்பூ காலனி உள்ள ஒரு வீட்டில், மாவா பதுக்கி விற்பதாக, வியாசர்பாடி போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் சோதனையிட்ட போது, அங்கு மாவா பதுக்கி விற்றது தெரிந்தது.சம்பவத்தில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார், 29; திவ்யா, 27; சுரேகா, 30; பார்வதி, 45 ஆகிய நால்வரை, போலீசார் கைது செய்து, 150 கிலோ மாவாவை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE