அண்ணாசாலை - தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய, 40 கிலோ தங்கம், 150 கிலோ வெள்ளிக் கட்டிகளுக்கு, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே, நேற்று மாலை, ஜெயச்சந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த, சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.இதில், 40 கிலோ தங்கம், 150 கிலோ வெள்ளிக் கட்டிகள் இருந்தன. தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான ஆவணங்களை, தேர்தல் பறக்கும் படையினர் சரிபார்த்தனர்.இதில், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் தங்கம், வெள்ளிப் பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை, அதிகாரிகள் விடுவித்தனர். தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், சவுகார்பேட்டையில் உள்ள, ஒரு நகைக் கடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE