திருத்தணி- அ.தி.மு.க., வேட்பாளருக்கு, ஓட்டு போட வேண்டும் என, பணம் பட்டுவாடா செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரமணா போட்டியிடுகிறார். இவருக்கு ஓட்டளிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பிரமுகர்கள் மூன்று பேர் நேற்று, திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு கிராமத்தில் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர்.தேர்தல் பறக்கும் படை அலுவலர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர், அத்திப்பட்டு கிராமத்தில் சோதனை நடத்தினர்.அப்போது, ஓட்டுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் மேகநாதன், 46, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.மேலும், தப்பியோடிய இருவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். மேகநாதனிடம் இருந்து, பறக்கும் படையினர், 12 ஆயிரத்து, 700 ரூபாயை பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE