சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று 5வது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று (ஏப்.,6) 3,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் பாதிப்பு 6வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,809 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.68 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருப்பூர், மதுரை பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் இன்று (ஏப்.,5) 3,645 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,07,124 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 260 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-191) மூலமாக, இன்று மட்டும் 80,856 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 93 ஆயிரத்து 091 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,176 பேர் ஆண்கள், 1,469 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,47,561 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,59,527 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

டிஸ்சார்ஜ்
இன்று மட்டும் 1,809 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 68 ஆயிரத்து 722 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும் 9 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,804 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE