: புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், டில்லியில், இரவு, 10:00 மணி முதல், மறுநாள் காலை, 5:00 மணி வரையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்து
உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, டில்லி பேரிடர் நிர்வாக ஆணையக் கூட்டம், நடந்தது.இதில், இரவு நேர ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று இரவில் இருந்து, ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.'தகுந்த இ - பாஸ் பெற்று உள்ளோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அத்தியாவசியப் பணிகள், மருத்துவ மனைக்கு செல்வோர், விமான, ரயில், பஸ் பயணியர், தகுந்த ஆதாரத்தை காட்டினால், விலக்கு அளிக்கப்படும்' என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE