அபுஜா:நைஜீரியாவில் உள்ள சிறையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பயன் படுத்தி, 1,800க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பினர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில், இமோ மாகாணத்தின் ஓவெர்ரி நகரில் உள்ள சிறை வளாகம் மீது, நள்ளிரவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.சிறையில் இருந்த, தங்கள் தரப்பினரை வெளியேற்றுவதற்காக நடத்தப்பட்ட இந்த தாக்குதல், இரண்டு மணி நேரம் வரை நீடித்தது. மேலும், அருகில் உள்ள போலீஸ் மற்றும் ராணுவ கட்டடங்கள் மீதும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, சிறையில் இருந்த, 1,800க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பினர்.
தப்பிச்சென்ற கைதிகளை தேடும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அவர்கள் சிக்குவர் என்றும், சிறைத்துறை செய்தி தொடர்பாளர் பிரான்சிஸ் எனோபோர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு, பயங்கரவாத அமைப்பினர் யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
அமைதிப்படை வீரர்கள் பலி
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணிகளில், ஐ.நா., அமைதிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.அங்குள்ள கிடால் பகுதியில், பயங்கரவாதிகளுக்கும், அமைதிப்படையினருக்கும் இடையே, கடந்த வாரம் கடும் சண்டை ஏற்பட்டது. இதில், 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், அமைதிப்படையினர் நால்வர் பலியாயினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE