வாலாஜாபாத் : மேல்பொடவூர் கிராமத்திற்கு, அரசு பஸ் வராததால், கிராம மக்கள், சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
காஞ்சிபுரம் - பரந்துார் மார்க்கத்தில், மேல்பொடவூர் உள்ளது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து, காரை, மேல்பொடவூர், நெல்வாய், ஏகனாபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக, பேரம்பாக்கம் வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது.சில மாதங்களாக, மேல்பொடவூர், நெல்வாய் ஆகிய கிராமங்களுக்கு, இந்த பஸ் செல்வதில்லை. மாறாக, பரந்துார் பிரதான சாலை வழியாக, பேரம்பாக்கம் செல்கிறது.இதனால், காஞ்சிபுரம் பகுதியில் இருந்து, இரவு வீடு திரும்புவோர், அச்சத்துடன், 1.5 கி.மீ., நடந்து செல்ல வேண்டி உள்ளது.
இது குறித்து, மேல்பொடவூர் மக்கள் கூறியதாவது:காலை, 7:15 மணி மற்றும் இரவில் இயக்கப்படும் அரசு பேருந்து, மேல்பொடவூர் கிராமத்திற்கு வருவதில்லை.போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டால், சாலை சேதம் என, மழுப்பலான பதில் அளிக்கின்றனர்.சோகண்டி கிராமத்திற்கு வரும் பஸ் மட்டும் வந்து செல்கிறது. பேரம்பாக்கம் பஸ், மேல்பொடவூர் கிராமம் வழியாக மீண்டும் இயக்கினால், வேலைக்கு சென்று வீடு திரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE