ஸ்ரீபெரும்புதுார் : தேர்தல் விடுமுறையால், 'சிப்காட்' தொழிற் பூங்கா, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து தரப்பினரும், ஓட்டளிக்கும் வகையில், நேற்று, பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலைகள் அதிகம் அமைந்துள்ள தொகுதியான, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர், ஓட்டளிக்க, தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.தேர்தல் விடுமுறை காரணமாக, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள ஐந்து சிப்காட் தொழிற் பூங்காக்களும், தொழிலாளர்கள், வாகன இயக்கமின்றி, வெறிச்சோடி காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE