பெண்ணாடம் : வயிற்று வலியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 55; விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.நேற்று முன்தினம் மாலை மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த சிவலிங்கம், பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார்.உடன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE