புவனகிரி : புவனகிரி அருகே முன் விரோத தகராறில் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புவனகிரியைச் சேர்ந்தவர் முருகன், 50; அதே பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இருவரது குடும்பத்திற்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் ரைஸ் மில்லுக்கு முருகன் சென்றபோது, திரவுபதி அம்மன் கோவில் அருகே வழிமறித்து மகாலிங்கம் மகன் வீரசேகர், கோவிந்தராஜ் மகன் பிரித்திவ் வழிமறித்து திட்டி, தாக்கினர்.இதில், காயமடைந்த முருகன், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.புகாரின் பேரில் புவனகிரி போலீசார், வீரசேகர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE