நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி ஓட்டுச்சாவடியை கலெக்டர் பார்வையிட்டார்.
தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. வாக்காளர்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டு மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.பண்ருட்டி தொகுதியில் நெல்லிக்குப்பம் நகராட்சி மேற்கு பள்ளியில் மாதிரி வாக்கு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. இங்கு வாக்காளர்களை வரவேற்கும் வகையில் சுவர்களில் வர்ணம் பூசி, வாழை மரங்கள் கட்டப்பட்டு, சிவப்பு கம்பள விரிப்பு போடப்பட்டிருந்தது.
ஓட்டுச்சாவடி முழுதும் பலுான்கள் கட்டி அலங்காரம் செய்திருந்தனர்.இந்த ஓட்டுச்சாவடியை கலெக்டர் சந்திரசேகர சகாமுரி பார்வையிட்டார். தேர்தலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென ஓட்டுச்சாவடி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.ஆனால் இந்த ஓட்டுச்சாவடிக்கு வந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றிருந்தனர். இதனை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. கலெக்டர் ஆய்வின் போது, தாசில்தார் பிரகாஷ், நகராட்சி கமிஷ்னர் பார்த்தசாரதி, இன்ஜினியர் கிருபாகரன், வி.ஏ.ஓ., நீதிமோகன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE