பாலக்காடு:பாலக்காடு மாவட்டத்தில், 76.17 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.நேற்று இரவு 8.00 மணி நிலவரப்படி, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் 76.17 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மாவட்டத்தில் அதிக அளவில், சித்துார் சட்டசபை தொகுதியில் 79.13 சதவீதம் பேர் வாக்களித்தனர். பாலக்காடு சட்டசபை தொகுதியில் 73.67 சதவீதம் பேர் வாக்களித்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஓட்டுப்பதிவு நடந்தது. எந்த அசம்பாவிதமும் இல்லாமல், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE