கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஓட்டு போட பயன்படுத்தப்படும் பூத் சிலிப் உரிய நேரத்தில் வழங்காததால் வாக்காளர்கள் அவதிப்பட்டனர்.
தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டிலில் உள்ள வரிசை எண், பூத் நெம்பர், பாகம் உள்ளிட்ட தகவல்களை உடனே தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் சார்பில் 'பூத் சிலிப்' வழங்கப்பட்டு வருகிறது.நேற்று நடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டம் முழுதும் அரசு சார்பில் 'பூத் சிலிப்' முறையாக வழங்கப்படவில்லை.இதனால், பல்வேறு பகுதிகளில் ஓட்டுச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் வரிசை எண், பாகம் தெரியாமல் அல்லாடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE