அம்பத்துார் : பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த வாக்காளர்கள், தபால் ஓட்டு பதிவு செய்ய வாய்ப்பளிக்க வேண்டுமென கோரினர்.
சென்னை, வில்லிவாக்கம் ஐ.சி.எப்., மற்றும் கக்கன்ஜி நகரில் வசித்தவர்களுக்கு, அம்பத்துார் அத்திப்பட்டில் உள்ள, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அங்கு குடியேறியவர்களில், 2,800 வாக்காளர்கள் உள்ளனர். அம்பத்துார் தொகுதி வாக்காளர் பட்டியலில், அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதனால், அவர்கள், நேற்று ஓட்டளிக்க முடியவில்லை. அதிருப்தி அடைந்த அவர்கள், அதை கண்டித்து கோஷமிட்டனர். பின், தங்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்யும் வாய்ப்பு வழங்க வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE