சென்னை:சென்னை, மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட, மந்தைவெளி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வளாகத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில், நடிகை குஷ்பு ஓட்டு போட்டார்.
பின், அவர் கூறியதாவது:மக்கள் அனைவரும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில், தங்கள் உரிமையை, ஜனநாயக கடமையை நிலைநாட்ட, வீட்டை விட்டு வெளியே வந்து, ஓட்டு போட வேண்டும். தேர்தல் மிக சிறப்பாக நடக்கிறது; 80 சதவீதம் ஓட்டுகள் பதிவாகும் என, நினைக்கிறேன்.
ஆயிரம் விளக்கு தொகுதி உட்பட, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், தி.மு.க., வினர் பண பட்டுவாடா செய்துள்ளனர். பணப் பட்டுவாடாவில் அவர்கள், 'பேமஸ்' ஆனவர்கள்.இது குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, குஷ்பு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE