உடுமலை:உடுமலை அருகே ஜல்லிபட்டியில் முழுநேர கிளை நுாலகம் செயல்படுகிறது. இங்கு தீவிர புரவலர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.இந்நுாலகத்தில், படித்து, போட்டித்தேர்வில், தேர்ச்சி பெற்று, வனத்துறை பணியில், சேர்ந்துள்ள, மணிகண்டன், புரவலராக இணைந்தார். மேலும், ஜல்லிபட்டியை சேர்ந்த விவசாயி, பத்மநாபனும், ஆயிரம் ரூபாய் வழங்கி, புரவலராக இணைந்தார். இதுவரை, கிளை நுாலகத்தில், 155 புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, நுாலகர் லட்சுமணசாமி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE