பொள்ளாச்சி:தேர்தலை முன்னிட்டு, நெகமம் வாரச்சந்தை, முன்கூட்டியே திங்கள்கிழமை கூடியதால், நேற்று நெகமம் வந்த வடமாநில தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.பொள்ளாச்சி, நெகமம் வாரச்சந்தை செவ்வாய்கிழமை தோறும் கூடுகிறது. சுற்றுப்பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை, இந்த சந்தையில் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வழக்கம்போல நேற்று, நெகமத்தை சுற்றியுள்ள தென்னை நார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, வடமாநில ஆண், பெண் தொழிலாளர்கள் நேற்று நெகமம் சந்தைக்கு வந்து, சந்தை நடைபெறாதது கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் நடைபெறும் நெகமம் வாரச்சந்தை, தேர்தலை முன்னிட்டு, நடப்பு வாரம், முன்கூட்டியே திங்கள்கிழமை கூடியது. இது தெரியாமல், நார் உற்பத்தி தொழிலாளர்கள் சந்தைக்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE