வால்பாறை:வால்பாறை, நடுமலை எஸ்டேட் வடக்கு அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளி, ஓட்டுச்சாவடியாக உள்ளது. இந்த ஓட்டுச்சாவடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். நடுமலை வடக்கு, தெற்கு பிரட்டை சேர்ந்த மக்கள் இந்த ஓட்டுச்சாவடியை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று சட்ட சபை தேர்தலையொட்டி இந்த ஓட்டுச்சாவடிக்குள் செல்லும் நடைபாதை இடிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் வயது முதிர்ந்த வாக்காளர்கள் நடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். பள்ளி மாணவர்கள், முதியவர்கள் நலன் கருதி வால்பாறை நகராட்சி சார்பில், நடுமலை துவக்கப்பள்ளிக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் பத்து ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE