ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 1647 மையங்களில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது, முகவர்கள் வர தாமதத்தால் 28 ஓட்டுப்பதிவு மையங்களில் தாமதம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம்ராஜா மேல்நிலைப்பள்ளியில் 3 மையங்களிலும், சுவார்ட்ஸ்பள்ளியில் ஒரு மையத்திலும், பெருங்குளம் அரசுப்பள்ளி,புதுமடம் அரசுப்பள்ளி,திருவாடானை தொகுதி தெற்குதரவை உள்ளிட்ட 28 இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன.அங்கு தொழில்நுட்ப பிரிவினர் அழைக்கப்பட்டு சரி செய்யப்பட்ட பின் ஒருமணி நேரம் வரை தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. இதே போல்பரமக்குடி, முதுகுளத்துார் தொகுதிகளில்சில ஓட்டுச்சாவடிகளில்அரசியல் கட்சி முகவர்கள் வராததால்தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE