பாலக்காடு:பாலக்காடு மாவட்டம், நெம்மாரா தொகுதி வித்தனச்சேரியை சேர்ந்தவர் கார்த்தியாயினி, 69. இவர் வித்தனச்சேரி ஆரம்பப் பள்ளியில் ஓட்டு அளித்து வீட்டுக்கு திரும்பும்போது, மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி பலியானார்.
அலுவலர் படுகாயம்:
பாலக்காடு ஸ்ரீகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் வித்யாலட்சுமி 31, மண்ணார்க்காடு தொகுதிக்கு உட்பட்ட அகளி அரசு மேல்நிலைப்பள்ளி, ஓட்டுச்சாவடி அலுவலராக இருந்தார். இவர் நேற்று காலை பள்ளியின் முதல் மாடியில் நின்று கொண்டிருந்தபோது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், பெருந்தல்மண்ணா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE