கமுதி : கமுதி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
பரமக்குடி தொகுதி கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாங்கிபட்டி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே சாலை, பஸ் வசதி, தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். பலமுறை போராட்டம், மனுக்கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர்.இந்த கிராமத்தில் 264 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்கு வந்த அதிகாரிகள் ஓட்டு அளிக்க யாராவது வருவார்களா என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE