ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பூத் சிலிப் இல்லாதவர்களை ஓட்டு போட அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட சக்கரக்கோட்டை நேரு நகர் பகுதி ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பூத் சிலிப் இல்லாமல் வாக்களிக்க வந்த 100க்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் ஓட்டு போட அனுமதிக்கவில்லை.பூத் சிலிப் வாங்கி வருமாறு கூறினர். இதனால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூத் சிலிப் இல்லாத பிரச்னை பரவலாக அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஏற்பட்டது.
பூத் சிலிப் தேர்தல் நாளுக்கு முந்தைய நாளில் தான் ஓட்டுச்சாவடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப்பை வாக்காளர்களின் வீடு தேடி அதிகாரிகள் கொடுக்க வேண்டும். ஆனால் போதிய நேரம் இல்லாததாலும், முறையாக பணியாளர்களை நியமித்து வழங்காததாலும் 75 சதவீதம் பேருக்கு வழங்கப்படவில்லை.இதனால் ஓட்டுப்பதிவு இடத்தில் தான் நேற்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. பூத் சிலிப் இருந்தால் அதில் உள்ள பாகம் எண், வாக்காளர் வரிசை எண்ணை பார்த்து விரைவாக ஓட்டளிக்க முடியும். இதனால் தான் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பூத் சிலிப் இல்லாதவர்களை வாங்கி வருமாறு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE