ராமநாதபுரம் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று( ஏப்.,7) தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர்கள், அரசு ஊழியர் சங்கம் சண்முகநாததுரை, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முருகேசன் ஆகியோர் கூறியுள்ளதாவது: தேர்தல் பணி செய்யும் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணிதளத்தில் இருந்து வாகன வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தல் பணிகளை முடிந்து மறுநாள் காலை தான் வீடு வந்து சேரமுடியும் என்பதால் ஏப்., 7 ( இன்று) தேர்தல் பணி செய்த ஊழியர்களுக்கு ஈடு செய் விடுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE